ஈரோடு, டிச. 11: ஈரோடு வடக்கு மாவட்ட திமுக., செயலாளர் நல்லசிவம் அறிவிப்பில் கூறியுள்ளதாவது: ஈரோடு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர பகுதிகளில் கழக உறுப்பினர் அட்டை வழங்கப்படவுள்ளது. அதன்படி 11ம் தேதி அம்மாபேட்டை, பவானி ஒன்றியம் மற்றும் நகர பகுதிகளிலும். 12ம் தேதி அந்தியூர், கோபி, சத்தி தெற்கு ஒன்றிய பகுதிகளில் வழங்கப்படுகிறது. 13ம் தேதி நம்பியூர், டி.என்.பாளையம், சத்தி வடக்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளிலும், 14ம் தேதி பவானிசாகர், தாளவாடி ஒன்றியம் மற்றும் சத்தி, புளியம்பட்டி நகர பகுதிகளிலும், 15ம் தேதி கோபி நகர பகுதிகளிலும் உறுப்பினர் அட்டை வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் தங்களுக்குட்பட்ட ஊராட்சி வார்டுகளில் உள்ள உறுப்பினர் அட்டை பெற வேண்டிய அனைத்து கழக தோழர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.