மயான ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் வலியுறுத்தல்

ஈரோடு, டிச.11: பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள மயானம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அதனை மீட்க கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பவானி வட்டத்திற்குட்பட்ட சலங்கபாளையம் பேரூராட்சி பெரியாக்கவுண்டன்வலசு பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டாக வசித்து வரும் அப்பகுதி மக்களுக்கு  தனியாக கடந்த 1974ம் ஆண்டு 75 சென்ட் மயான நிலம் அரசின் சார்பில் வழங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த மயானத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்ததால், தற்போது மயானத்தின் அளவு குறைந்துவிட்டது. இதனால் சடலத்தை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  எனவே மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என கூறி கிராம மக்கள் சார்பில் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Related Stories: