பெண் தற்கொலை

சத்தியமங்கலம், டிச. 11: பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (39). கோயில் பூசாரியான இவருக்கு மேகலா (29) என்ற மனைவியும், மதன்(7) என்ற மகனும் உள்ளனர். கணேசனுக்கு குடிப்பழக்கம் உள்ளதால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணேசனும், மகன் மதனும் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிவிட்டனர். நேற்று காலை வீட்டின் அறைக்குள் சென்று பார்த்தபோது மேகலா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சிடைந்த கணேசன் பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த மேகலாவின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கணேசன் மேகலாவை கொலை செய்துவிட்டதாக கூறி தகராறில் ஈடுபட்டனர். இதையறிந்த சத்தி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலையா, தற்கொலையா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: