விபத்தில் ஒருவர் பலி

கொடுமுடி, டிச. 11:  ஈரோடு மாவட்டம் கொடுமுடி ரோஜா நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (33), ரியல் எஸ்டேட் புரோக்கர். இவர் நேற்று தனது மனைவி ஷீலாகுமாரி (27), மகன் கவின்குமார் (6), ஒன்னறை வயது மகள் வெண்பா ஆகியோருடன் ஊஞ்சலூர் அருகே உள்ள ஆறாம்பாளையம் அம்பேத்கர் நகரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது தாமரைப்பாளையம் அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த ஆரோக்கியசாமி (74) என்பவர் மீது பைக்மோதியதில் நிலை தடுமாறி குடும்பத்தோடு கீழே விழுந்தனர். இந்த விபத்தில் சுரேஷ்குமாருக்கு தலையில் பலத்த காயமடைந்தார். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. சுரேஷ்குமாரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பயலனின்றி  சுரேஷ்குமார் உயிரிழந்தார். இது குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: