வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட பூமிபூஜை

ஈரோடு,டிச.11: ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் கடந்த 2014ம் ஆண்டு பிரிக்கப்பட்டு, கிழக்கு, மேற்கு என உருவாக்கப்பட்டது. இதில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் ஈரோடு மாமரத்துப்பாளையத்தில் மாதம் ரூ.42ஆயிரம் வாடகையிலும், கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் ஈரோடு சோலாரில் சொந்த கட்டிடத்திலும் இயங்கி வந்தது.  மாமரத்துப்பாளையம் வட்டார போக்கவரத்து அலுவலகம் சொந்த கட்டிடத்தில் அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு கனிராவுத்தர்குளம் சிஎஸ் நகரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதில் ரூ.2 கோடியே 73லட்சத்து 28ஆயிரம் மதிப்பில் இரண்டு அடுக்கு கட்டிடம் கட்ட ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று சிஎஸ் நகரில் நடைபெற்றது. ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி தலைமை வகித்தார். இதில் எம்எல்ஏக்கள் ராமலிங்கம்,தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

Related Stories: