மனித உரிமை நாள் உறுதிமொழி ஏற்பு

ஈரோடு, டிச. 11: மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் கதிரவன் உறுதிமொழியினை வாசிக்க ஊழியர்கள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராமன், தனித்துணை ஆட்சியர் பிரபாவதி உள்பட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: