அரசு பள்ளியில் கலைத்திருவிழா போட்டி

ஊத்துக்கோட்டை, டிச.11: ‘தமிழகப் பள்ளி கலைத்திருவிழா’ என்னும் திட்டத்தின்படி, பெரியபாளையம் அருகே பூச்சி அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள்  நடத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெஸ்லி ராபர்ட் தலைமை தாங்கினார்.உதவி தலைமையாசிரியர் தமிழ் செல்வி, ஆசிரியை நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டிகளில் மாணவ - மாணவிகளிடையே மொழியாற்றல் பாரம்பரியம், செவ்வியல், நவீனம், ஆன்மிகம், கலாசாரம், கிராமியம் மற்றும் நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் வகையில்  பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, நாட்டுப்புற நடனம், பழமொழி கூறுதல், ஆத்திச்சூடி, திருக்குறள் ஒப்புவித்தல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடப்போட்டி, அழகு கையெழுத்து போட்டி ஆகியவை நடத்தப்பட்டது.இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர் என தலைமையாசிரியர் தெரிவித்தார். இறுதியில் ஆசிரியை அஜிதா நன்றி கூறினார்.

Related Stories: