அம்பத்தூர், டிச.11: அம்பத்தூர் காவல் நிலையம் அருகே துப்புரவு சூப்பர்வைசரின் மொபட் பெட்டியை உடைத்து ₹3லட்சத்தை கொள்ளையடித்த பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூர், சலவையாளர் குடியிருப்பை சேர்ந்தவர் ஹரி (39). இவர், மதுரவாயல் அருகே வானகரம் முதல்நிலை ஊராட்சியில் துப்புரவு பணியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். கடந்த 6ம் தேதி ஹரி, கட்டி வந்த ஏலச்சீட்டு முடிந்தவுடன் அதற்குரிய தொகையான ₹3லட்சம் ரொக்கத்தை வாங்கியுள்ளார். இதனை, ஹரி மொபட் பெட்டியில் வைத்து கொண்டு வில்லிவாக்கம் ஒன்றிய அலுவலத்துக்கு தபால் வாங்க வந்துள்ளார். அங்கு, அவர் அலுவலகம் முன்பு மொபட்டை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர், மீண்டும் அவர் தபால் வாங்கி கொண்டு திரும்பி வந்துள்ளார். அப்போது, அவரது மொபட் பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிலிருந்த ₹3லட்சம் பணத்தை காணவில்ைல. அதை மர்ம நபர்கள் அபேஸ் செய்தது தெரிந்தது.