செம்பனார்கோவில் அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு

செம்பனார்கோவில், டிச.7:  செம்பனார்கோவில் அடுத்து பரசலூர் நடுக்கரை மேலப்பாதி சாலையில் உள்ள குளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக செம்பனார்கோவில் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் நீலக் கலர் சட்டை மற்றும் கைலி அணிந்திருந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்து குளத்தில் வீசினரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: