மன்னார்குடி, டிச. 7:கோட்டூர் அருகே வாய்க்காலில் சடலமாக மிதந்தவர் மாஜி ஊராட்சி மன்ற தலைவர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் சித்தமல்லி ஜீவா தெரு மஞ்சக் கன்னி வாய்க்கால் உள்ளது. இவ்வாய்க்காலில் தற்போது அதிகளவில் தண்ணீர் செல்கிறது. வாய்க்காலில் உள்ள சிறுபுதர் ஒன்றில் சிக்கி சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். சடலமாக கிடந்தவரின் உடல் அழுகியிருந்த காரணத்தினால் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுபற்றி அப்பகுதி விஏஓ ஞானசேகரன் பெருகவாழ்ந்தான் போலீசில் புகார் கொடுத்தார்.