கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

ெகங்கவல்லி, டிச.7:  கெங்கவலலி அருகே தெடாவூரைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கார்த்திக்சங்கர்(21). அதே பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து மகள் விஷ்ணுபிரியா(19). ேசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக்சங்கர், விஷ்ணுபிரியாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இதனை அறிந்த இருவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி, கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், நேற்று பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி போலீசில் தஞ்சமடைந்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் (பொ) சண்முகம் விசாரித்து, இரண்டு தரப்பில் பெற்றோரை அழைத்து சமாதானம் பேசி, காதல் ஜோடியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

Related Stories: