சேலம், டிச. 7: கோமாரி நோய் பரவுவதை தடுக்க, சேலம் மாவட்டத்தில் கால்நடை சந்தைகள் மேலும் 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவுவதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நோய் பாதித்த கால்நடைகளை விற்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என விவசாயிகளுக்கு கால்நடை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.பருவ நிலை மாற்றங்களாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாலும், கால்நடைகளில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள கால்நடை சந்தைகளுக்கு வெளியூர்களிலிருந்து கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. மேலும், ஒரு கால்நடையிடமிருந்து மற்றொரு கால்நடைக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.