ஓமலூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்

ஓமலூர், டிச.7: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, ஓமலூர் பஸ் ஸ்டாண்டில்  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் அமைத்து கொடுக்க மத்திய அரசை வலியுறுத்தி, கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முகம்மது ரயீஸ் தலைமை வகித்தார். அக்கீம் வரவேற்றார். கலீல் அஹமத் துவக்கி வைத்தார். ஓமலூர், எடப்பாடி, ஜலகண்டாபுரம், தீவட்டிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி பகுதி நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் சேக் முகமது அலி, திராவிடர் கழகம் பாலு, விடுதலை சிறுத்தைகள் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: