சத்திரம் ரயில் நிலையத்திற்கு 1300 டன் உரம் வரத்து

சேலம், டிச.7: சேலம் சத்திரம் ரயில் நிலையத்திற்கு 1300 டன் உரம் வந்து இறங்கியது.சேலம் சத்திரம் ரயில்வே சரக்கு நிலையத்திற்கு வட மாநிலங்களில் இருந்து கோதுமை, பருப்பு, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும், சிமெண்ட், உரம், இரும்பு பொருட்களும் வருகின்றன. இதேபோல், தூத்துக்குடி, விசாகப்பட்டினம் போன்ற துறைமுகங்களில் இருந்து உரம் கொண்டு வரப்படுகிறது. நேற்று, சென்னை எண்ணூரில்  இருந்து 22 வேகன்களில் 1300 டன் யூரியா சேலம் சத்திரம் ரயில்வே சரக்கு நிலையத்திற்கு வந்தது. இவை சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: