சேலம், டிச.7: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சிஹெச்பி காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் குப்புசாமி (எ) சதாசிவம் (28), பிரபல கொள்ளையன். இவரை கடந்த மாதம் சங்ககிரி போலீசார், வழிப்பறி வழக்கில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே வழிப்பறி கொள்ளை, கொலை மிரட்டல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், கொள்ளையன் குப்புசாமியை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க சங்ககிரி இன்ஸ்பெக்டர் கண்ணன், மாவட்ட எஸ்பி ஜோர்ஜி ஜார்ஜ் மூலம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையை ஏற்ற கலெக்டர், பிரபல கொள்ளையன் குப்புசாமியை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க நேற்று உத்தரவிட்டார். இதற்கான ஆணையை மத்திய சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.