இடைப்பாடியில் ஒன்றிய, பேரூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

இடைப்பாடி, டிச.7: இடைப்பாடியில் ஒன்றிய மற்றும் பேரூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இடைப்பாடி ஒன்றியம், பூலாம்பட்டி பேரூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் சித்தூரில் நேற்று நடந்தது. ஒன்றிய அவை தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் பூவாக்கவுண்டர் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முருகேசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், கருணாநிதி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், வர்த்தக துணை அமைப்பாளர் கருப்பண்ணன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் தியாகராஜன், மாதேஷ், நாகராஜன், மகளிரணி துணை அமைப்பாளர் முனியகுமாரி, பூலாம்பட்டி பேரூர் செயலாளர் பழனிசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, நல்லதம்பி, அழகுதுரை, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சந்திரசேகரன், அரசி மாதையன், கண்ணம்மாள், இடைப்பாடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்தமிழ்செல்வன், செந்தில்குமார், சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநில ெசாத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் கந்தசாமி, மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் அனைவரும் ஒற்றுமையாக பணி செய்து திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவது, பூத் கமிட்டி உறுப்பினர்கள் திறம்பட செயல்படுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: