மாநில அளவிலான சிலம்ப போட்டி சுவாமி விவேகானந்தர் பள்ளி மாணவர் சாதனை

இளம்பிள்ளை, டிச.7:  மாநில அளவிலான சிலம்ப போட்டியில் சுவாமி விவேகானந்தர் மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்.

மாநில அளவில் மூத்தோருக்கான சிலம்பாட்ட போட்டி, சென்னை அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் இளம்பிள்ளை அருகே, கஞ்சமலையூர் கேகே நகர் சுவாமி விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் குருபிரசாத் கலந்து கொண்டு, மாநில அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவரை பள்ளி தாளாளர், முதல்வர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

Related Stories: