ஆத்தூரில் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ஆத்தூர், டிச.7:  ஆத்தூரில், துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.ஆத்தூர் நகராட்சியில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களுக்கு, இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் துப்புரவு பணியாளர்கள் 146 பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கி, ஆலோசனை வழங்கப்பட்டது. மல்லியகரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், ஆத்தூர் நகர்புற மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர்(பொ) சென்னகிருஷ்ணன், உதவி பொறியாளர் கவிதா, துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: