நாமக்கல், டிச.7: நாமக்கல் பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவியர்கள், மோகனூர் பகுதியில் விவசாயம் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து மோகனூர் வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகளுக்கு மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, சாண எரிவாயு தயாரித்தல் போன்றவையும் ஒருங்கிணைந்த பண்ணையமாகும் என விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். ஒருங்கிணைந்த பண்ணையம் முறை செயல்படுத்துவது, அதனால் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் குறித்தும் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர்.