அறிவியல் கண்காட்சியில் விவேகா மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை

சேந்தமங்கலம், டிச.7:  நாமக்கல் நவோதயா அகாடமி பள்ளியில், சென்னை அக்னி அறிவியல் கல்லூரி சார்பில், அக்னி -2018 என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் சேந்தமங்கலம் பொன்னம்மாபுதூர் விவேகா மெட்ரிக்குலேசன் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்பள்ளியின் 8ம் வகுப்பு மாணவிகள் பர்கத், ஜனனி ஆகியோர் மாவட்ட அளவில் 3ம் இடம் பிடித்தனர். இவர்கள் இருவரும் மாநில அளவில் நடைபெறும் கண்காட்சிக்கு தேர்வாகியுள்ளனர். வெற்றிபெற்ற மாணவிகளை பள்ளியின் தலைவர் நாகராஜன், செயலாளர் பாண்டுரங்ககுப்தா, முதல்வர் சுமதி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

Related Stories: