ராயல் இண்டர்நேசனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

குமாரபாளையம், டிச.7: குமாரபாளையம் ராயல் இண்டர்நேசனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாறுபட்ட படைப்புகளோடு மாணவ, மாணவிகள் கண்காட்சியில் பங்கேற்றனர்.குமாரபாளையம் ராயல் இண்டர்நேசனல் பள்ளியில், அறிவியல் கண்காட்சியை பள்ளியின் தாளாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகள் தங்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். இதற்கு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் விளக்கமளித்தனர். இதில் உணவு களஞ்சியம், நீர் ஆதாரங்களின் தொகுப்பு, ஜூராசிக் பார்க் உள்ளிட்ட அமைப்புகள், அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த கண்காட்சியில் பள்ளியின் செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதா ஆனந்தன், பள்ளி முதல்வர் அனிதா ஆன்ட்ரூ மற்றும் மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: