திருச்செங்கோடு, டிச.7: திருச்செங்கோடு அடுத்த வையப்பமலை பஸ் நிலையம் அருகில், எலச்சிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில், அயோத்தியில் ராமருக்கு ஆலயம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்து. ஒன்றிய தலைவர் சந்தரசேகர் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பார்த்திபன், நாமக்கல் நகர செயலாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் இளமுருகன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். நாமக்கல்: நாமக்கல்லில் இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். நகர துணைத்தலைவர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை விளக்கி கோஷமிட்டனர்.