போச்சம்பள்ளி, டிச.7: பாரூர் அருகே காதல் மனைவியை காணவில்லை என கணவர் தெரிவித்த புகாரின்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாரூர் அருகே மேல்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ்(22). வெல்டிங் தொழிலாளியான இவரும், மாலதி(20) என்பவரும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளான். இந்நிலையில் கடந்த 24ம் தேதி வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்ற மாலதி, அதன் பின்பு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.