கிருஷ்ணகிரி, டிச.7: கிருஷ்ணகிரி அணையில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் ராமஜெயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கிறது. இப்பயிற்சியில் தொழிலை கற்றுக்கொள்வதுடன், மென்திறன்கள் குறித்த செயல்முறை பயிற்சிகள், வங்கிகள் வழங்கும் சேவைகள் குறித்த விழிப்புணர்வு, சந்தை ஆய்வு செய்தல், திட்ட அறிக்கை தயாரித்தல் போன்ற பயனுள்ள திறன்களை பெறலாம். அத்துடன் தொழில் முனைவோர், வங்கி மேலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெறலாம். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு தொழில் துவங்க வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல், திறன் மேம்படுத்தும் பயிற்சி போன்ற சேவைகளும் பயிற்சிக்கு பின்பு இரண்டு ஆண்டுகளுக்கு கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.