மாவட்டம் முழுவதும் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

தர்மபுரி, டிச.7: அம்பேத்கர் நினைவுதினத்தையொட்டி, பல்வேறு அமைப்பினர் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, தர்மபுரி சட்டக்கல்லூரி மாணவர்கள், அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ராஜா மகாதேவன், ஆனந்தி, ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அலுவலர் சங்க மாவட்ட தலைவர் அமரவேல், பிடிஓ தலைமையில் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் முருகன், மாநில தலைமை நிலைய செயலாளர் கிருஷ்ணன் பிடிஓ, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயபூர்ணிமா, மாநில துணை செயலாளர் சாக்ரடீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதே போல், ஆதிதமிழர் முன்னேற்ற கழகம் சார்பில், மாவட்ட தலைவர் ராஜமூர்த்தி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க நல்லம்பள்ளி ஒன்றியக்குழு சார்பில், லளிகம் கடைவீதியில் ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் தலைமையில், அம்பேத்கர் படத்திற்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். தேசிய மக்கள் கட்சியின் நிறுவனர் இனமுரசு கோபால் தலைமையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் மாறன் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி நகர திமுக சார்பில், நகர செயலாளர் தங்கராஜ் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அன்பழகன், சுருளி, மாதேஸ், உதயசந்திரன், வெல்டிங் ராஜா மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில், நகர செயலாளர் குருநாதன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதிமுக நிர்வாகிகள் பூக்கடை ரவி, பழனிசாமி, அங்குராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தர்மபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். நிர்வாகிகள் நந்தன், மின்னல் சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் பெருமாள் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். திக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்ட பாஜக சார்பில், மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமையில் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், வெங்கட்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அரூர்:அரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அவரது சிலைக்கு மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் வட்டார தலைவர் சுபாஷ், நகர தலைவர் கணேசன், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் மாவட்ட வழக்கறிஞர் பசுபதி அம்பேக்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் சம்பத்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். பாஜக சார்பில், பொறுப்பாளர்கள் சாமிகண்ணு, வேடியப்பன் ஆகியோர் மாலை அணிவித்தனர். திமுக சார்பில் பொறுப்பாளர்கள் ராஜசேகர், செந்தாமரைகண்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: