இளம்பெண் தற்கொலை ஆர்டிஓ விசாரணை

கடத்தூர், டிச.7:  கடத்தூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் அருகே கணவாய்குட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். இவர் கடத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கயல்விழி (21). இவர்களுக்கு 2 வருடத்திற்கு முன் திருமணமாகி மகன் உள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கயல்விழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் இளம்பெண் இறந்ததால்,அரூர் ஆர்டிஓ புண்ணியகோடி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: