சிவகங்கை, டிச.7: கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 55 செயல் அலுவலர்(நிலை மூன்று), 65செயல் அலுவலர்(நிலை நான்கு) காலிப்பணியிடம், கூட்டுறவு த்துறையில் காலியாகவுள்ள 30 இளநிலை ஆய்வாளர் காலிப்பணி இடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்பட உள்ளது.