போட்டி தேர்வுக்கு இன்று பயிற்சி

சிவகங்கை, டிச.7:  கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 55 செயல் அலுவலர்(நிலை மூன்று), 65செயல் அலுவலர்(நிலை நான்கு) காலிப்பணியிடம், கூட்டுறவு த்துறையில் காலியாகவுள்ள 30 இளநிலை ஆய்வாளர் காலிப்பணி இடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் இன்று (டிச.7) முதல் தொடங்கப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், போட்டித் தேர்வுகளுக்கு ஏற்கனவே பயிற்சி அளித்துள்ள வல்லுநர்களும் பயிற்சி அளிக்க உள்ளனர். பயிற்சி வகுப்புகளின் போது பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி கூடுதல் விபரங்களை அறியலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: