தேவகோட்டை அருகே தாழ்வாக தொங்கிய மின்கம்பிகள் மாற்றியமைப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி

தேவகோட்டை, டிச. 7: தினகரன் செய்தி எதிரொலியாக தேவகோட்டை அருகே தாழ்வாக தொங்கிய மின்கம்பிகளை சரிசெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஒன்றியத்திற்குட்பட்டது தேரளப்பூர் கிராமம். இங்கிருந்து சுண்டமங்கலம் கிராமத்திற்கு தார்ச்சாலை செல்கிறது. இவ்வழித்தடத்தில் தொட்டு விடும் தூரத்தில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கின. இதனால் அவ்வழியே வாகனஓட்டிகள் அச்சத்துடன் சென்று வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மின்வாரியத்திடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக கடந்த 4ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மின்வாரிய ஊழியர்கள் தாழ்வாக தொங்கி மின்கம்பிகளை புதிய மின்கம்பம் நட்டு சரிசெய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: