திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நாளை சம்பகசஷ்டி துவக்கம்

திருப்புத்தூர், டிச.7: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நாளை காலை 9 மணிக்கு யோகபைரவர் சன்னதி முன்பு கும்பங்கள் வைத்து சிவாச்சாரியார்களால் அஷ்ட பைரவர் யாகம் ஆரம்பமாகும். காலை 11.30 மணியளவில் பூர்ணாகுதியும், மதியம் 12 மணிக்கு யோக பைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களாலும், யாகம் செய்யப்பட்ட புதிய நீராலும் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அர்ச்சனையும் நடைபெறும்.

பிற்பகல் 1 மணியளவில் சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். யோகபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இதேபோன்று மாலை 4.30 மணிக்கு அஷ்ட பைரவர் யாகமும், 7 மணிக்கு பூர்ணாகுதியும், 7.15 மணிக்கு யோக பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அர்ச்சனையும், 7.45 மணியளவில் தீபாராதனையும் நடைபெறும். நாளை முதல் டிச.13ம் தேதி வரை தினந்தோறும் சம்பவ சஷ்டி உற்சவம் நடைபெறும். ஏற்பாடுகளை சம்பக சஷ்டி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories: