ராமநாதபுரம், டிச.7: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம், தொண்டியில் எஸ்டிபிஐ மற்றுமட் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல் வகாப் தலைமை வகித்தார். பாபர் மசூதி இடிப்பை வழக்கை விரைந்து முடித்தல், சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலத்தை அகற்றுதல், மீண்டும் மசூதியை அதே இடத்தில் கட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர் தலைவர் அஜ்மல் சரிப் நன்றி கூறினார்.