கிராம பெண்களுக்கு மேம்பாட்டு பயிற்சி

மதுரை, டிச. 7: மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி, ஏஆர்டி நிறுவனம் மூலம் பெண்களின் வாழ்வாதர மேம்பாடு மற்றும் தொழில் முனைவர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. திருமங்கலத்தில் நடந்த பயிற்சியில் 40க்கும் அதிக பெண்கள் பங்கேற்று சித்திரை பூ தையல் தொழில்நுட்ப பயிற்சி பெற்றனர். இதற்கான நிறைவு விழாவிற்கு ஏஆர்டி நிறுவன செயல் இயக்குனர் டோலோ வின்சி தலைமை வகித்தார். நபார்டு வங்கியின் துணை பொது மேலாளர் ஹரிகிருஷ்ணராஜ் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். கிளை மேலாளர் சுவேதா, பயிற்சி ஆசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனர்.

Related Stories: