உசிலம்பட்டி, டிச. 7: உசிலம்பட்டி அருகே ஒரே சாமிக்கு இரண்டு சிலைகள் கொண்டு வந்ததால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.உசிலம்பட்டி அருகேயுள்ளது எருமார்பட்டி. இந்த ஊர் பெருமாள் கோயிலில் உள்ள ஒரே சாமிக்கு இரண்டு சிலைகள் கொண்டு வந்ததால் இரு பிரிவினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. அதில் ஒரு பிரிவினர் நாங்கள் கொண்டு வந்த சிலையைத்தான் வைப்போம் என்றும், மற்றொரு பிரிவினர் எங்கள் சிலையை வைப்போம் என்றும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் இரு பிரிவினர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.