சீர்காழி,டிச.7: சீர்காழி கரிக்குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சீர்காழி தேர் தெற்கு வீதியில் காந்தி பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா மையப்பகுதியில் கரிக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கால போக்கில் கரிகுளத்தில் நகரின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் கழிவுநீர் அந்த குளத்தில் கலந்து வருகிறது. இதனால் குளத்து நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.