செயல்படாத சிக்னல்களால் தினமும் போக்குவரத்து நெரிசல் கரூரில் வாகன ஓட்டிகள் திணறல்

கரூர்,டிச.7: கரூரில் செயல்படாத சிக்னல்களால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் தினமும் திணறி வருகின்றனர்.கரூர் பேருந்துநிலையம் மனோகரா கார்னர், சேலம்பிரிவு ரவுண்டானா, திண்ணப்பா கார்னர், வாங்கப்பாளையம், சர்ச்கார்னர், லைட்ஹவுஸ்கார்னர், சுங்ககேட் உள்ளிட்ட இடங்களில் போக்கு வரத்து நெரிசலை சீரமைக்க சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் திண்ணப்பாகார்னர், வாங்கப்பாளையம், சர்ச்கார்னர், பகுதிகளில்உள்ள சிக்னல்கள் செயல்படாமல் உள்ளன. வாங்கப்பாளையம் பிரிவு சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளது. கரூர் ராஜாஜி சாலை அண்ணாவளைவு அருகே கடந்த செப்டம்பர் மாதம் பாதாளா சாக்கடை யில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதனை சரிசெய்யும் பணி 3மாதமாகியும் இன்னும் முடிவடையவில்லை, இதனால் வாங்கல், மோகனுார் போன்ற நாமக்கல் மாவட்ட ஊர்களுக்கும் செல்லும் அனைத்து வாகனங்களும், அரசு பேருந்துகளும் இந்த வாங்கப்பாளையம் பிரிவுசாலை வழியாகத்தான் சென்று வருகின்றன. இந்த சிக்னல் செயல்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.மேலும் குழப்பம் நெரிசலும் ஏற்படுகிறது. எனவே பழுதான சிக்னல்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: