கரூர் மகாத்மா நகரில் குண்டும், குழியுமாக மாறிய சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர். டிச.7: கரூர்  அருகே மகாத்மா நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மக்கள்  நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த  சாலையை சீரமைக்க வேண்டுமென அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாலையில் ஜல்லிகள்  குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு சாலை உள்ளது.மேலும் வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குண்டும், குழியுமாக மாறிய சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Stories: