அரசு பள்ளி மாணவர்கள் பரிமாற்று திட்ட நிகழ்ச்சி

கடவூர்,டிச.7: கரூர் தாந்தோணி ஒன்றியம் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், கடவூர் ஒன்றியம் பாப்பயம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இடையே பள்ளி பரிமாற்று திட்ட நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் தமிழ் பாடம் நடத்துதல், கலையும் கைவண்ணமும் செயல் திட்டம், தேச தலைவர் வாழ்க்கை குறிப்பு, புத்தக பூங்கொத்து ஆகிய திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.கடவூர் வட்டார கல்வி அலுவலர் பழனிச்சாமி, அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் முத்துக்குமார், பாப்பையம்பாடி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று கருத்துகளை வழங்கினர்.

Related Stories: