தங்க காசுகள் திருடியவர் கைது

கரூர், டிச.7: கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள மின்னாம்பள்ளி காமராஜ் நகரை சேர்ந்தவர் பழனியப்பன் (50). பெயிண்டிங் காண்ட்ராக்டர். இவரது வீட்டில் கடந்த மாதம் 21ம்தேதி பீரோவில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நாணயங்கள் திருட்டு போனது.பழனியப்பன் கொடுத்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வந்த நிலையில், சமத்துவபுரத்தை சேர்ந்த அஜித் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: