கரூர்,டிச.7: பல்லாங்குழி சாலையை செப்பனிடவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் அருகே உள்ள மின்னாம்பள்ளியில் இருந்து சங்கரம்பாளையம் வழியாக வாங்கல் செல்லும் தார்சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் இருந்தது.சாலையை கைவிட்டு விட்டதால் குண்டும், குழியுமாக இருந்தது. தொடர்ந்து வாகனங்கள் சாலையில் சென்று வருவதால் பல்லாங் குழி சாலையாக மாறி வருகிறது. இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இப்பகுதி கிராம த்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனத்திலேயே சென்று கொண்டிருக்கின்றனர். இந்த சாலையில் சென்று வந்தால் முதுகுவலி ஏற்படுவதுடன், வாகனங்களும் அடிக்கடி மக்கர்ஆகி வருகிறது. உடனடியாக சாலையை செப்பனிட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.