கிருஷ்ணராயபுரம் பகுதியில் 100 கவுளி வெற்றிலை ரூ.1000க்கு விற்பனை

கரூர், டிச. 7: கிருஷ்ணராயபுரம்  பகுதியில் வெற்றிலை கொள்முதல் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் 100  கவுளி ரூ.1000க்கு விற்கப்படுகிறது.கிருஷ்ணராயபுரம்  பகுதியில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. லாலாப்பேட்டை,  கருப்பத்தூர், கள்ளப்பள்ளி, மகிளிப்பட்டி, சிந்தலவாடி, நந்தன்கோட்டை பகுதியில் பரவலாக வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. புயல் சேதம்  காரணமாக வெற்றிலை நுகர்வு குறைந்துள்ளது. இதனால் கொள்முதல் விலையும்  குறைந்துவிட்டது. கடந்த வாரம் ரூ.2 ஆயிரத்துக்கு விற்ற 100 கவுளி கொண்ட வெற்றிலை ரூ.1,000க்கு விற்பனையாகிறது.

Related Stories: