கரூர், டிச.7. கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரணம் இன்றி கடவூர் மக்கள் தவிக்கின்றனர்.கரூர் மாவட்டத்தில் கடவூர் ஒன்றியம் கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடவூர், முள்ளிப்பாடி, பாலவிடுதி, மாவத்துார், செம்பியநத்தம், கீழப்பகுதி, ஆதனுார் போன்ற கிராம ங்களில் 800 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மரங்கள் அழிந்துள்ளன. 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 668 குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிவாரண உதவி வழங்கப் பட்டது.