இடப்பிரச்னை தகராறில் திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

திருச்சி, டிச.7:திருச்சி, சோமரசம்பேட்டையை சேர்ந்தவர் சிங்காரம் (42). திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்தவர். இவருக்கும், இவரது பக்கத்து வீட்டுக்காரர் அங்குசாமிக்கும் இடையே இடம் பிரச்னை இருந்து வந்தது. நேற்று இடப்பிரச்னை தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அங்குசாமி அரிவாளால் வெட்டியதில், சிங்காரத்துக்கு கை, வயிற்று பகுதிகளில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் அங்குசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: