மார்த்தாண்டம், டிச. 7: மார்த்தாண்டம் மேம்பால பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பாலம் திறக்கப்பட உள்ளது. இந்த பால பணி செய்யும் நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை பார்ப்பதாக கூறி 65 வயது மதிக்க தக்க முதியவர் ஒருவர் அந்த பகுதியில் சுற்றி வருகிறார். வேட்டி, சட்டை அணிந்த நிலையில் காணப்படும் அந்த முதியவர் பால வேலைக்கு பயன்படுத்தும் போது மீதி வரும் சிறு, சிறு துண்டு கம்பிகளை பகலில் சேகரித்து வைத்து வந்துள்ளார். அதனை இரவில் சாக்கு பைகளில் கட்டி ஆக்கர் கடையில் விற்றுள்ளார்.