மார்த்தாண்டம் மேம்பாலத்தில் துண்டு கம்பிகள் திருட்டு

மார்த்தாண்டம், டிச. 7: மார்த்தாண்டம் மேம்பால பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பாலம் திறக்கப்பட உள்ளது.  இந்த பால பணி செய்யும் நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை பார்ப்பதாக கூறி 65 வயது மதிக்க தக்க முதியவர் ஒருவர் அந்த பகுதியில் சுற்றி வருகிறார். வேட்டி, சட்டை அணிந்த நிலையில் காணப்படும் அந்த முதியவர் பால வேலைக்கு பயன்படுத்தும் போது மீதி வரும் சிறு, சிறு துண்டு கம்பிகளை  பகலில் சேகரித்து வைத்து வந்துள்ளார். அதனை இரவில் சாக்கு பைகளில் கட்டி ஆக்கர் கடையில் விற்றுள்ளார்.

நேற்று முன்தினம் இரவும் அந்த முதியவர் துண்டு கம்பிகளை எடுத்துள்ளார். இதனை கண்ட பாலவேலை செய்யும் நிறுவன பணியாளர்கள் இதுபற்றி முதியவரிடம் கேட்டுள்ளனர். அப்போது ரோட்டில் கிடக்கும் துண்டு கம்பிகளை எடுக்க தான் செய்வேன் என மிரட்டலாக பேசியவாறு துண்டு கம்பிகளை சாக்கு பையில் எடுத்து சென்றுள்ளார்.

 இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: