அரிய வகை முள் எலி மீட்பு

திருப்பூர், டிச.7: வனப் பகுதியில் இருந்து தவறி வந்த அரிய வகை முள் எலியை ஆட்டோ டிரைவர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த தனசேகர். இவர், நேற்று காலை வீட்டை விட்டு வெளியே வந்த போது வீட்டின் அருகில் அரிய வகை முள் எலியை ஓடியது. வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த அந்த முள் எலியை பாதுகாப்பாக மீட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் கோட்ட வன சரகர் மகேஸ் முள் எலியை மீட்டு வனப்பகுதியில் விடுவித்தார்.

Related Stories: