வட்டமலைக்கரை ஓடையில் ரூ.6 லட்சத்தில் பராமரிப்பு பணி

வெள்ளக்கோவில்,டிச.7:  வெள்ளக்கோவில் அடுத்துள்ள உத்தமபாளையத்தில் உள்ள வட்டமலைக்கரை ஓடை ஆணை கடந்த 1980ம் ஆண்டு கட்டப்பட்டது. 6040 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் கட்டப்பட்ட இந்த அணை, கடந்த 20 ஆண்டுகளாக காய்ந்து வருகிறது.  இந்நிலையில், ரூ.6 லட்சம் செலவில் அணையின் எல்லைக்குட்பட்டநீட்டிப்புக் கால்வாயில் உள்ள செடி, கொடிகளை அகற்றி மதகுகளை சீரமைத்தல் மற்றும் பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. இப் பணிகளை தாராபுரம் செயற்பொறியாளர் சுப்பையன் ஆய்வு செய்தார். இந்த அணைக்கு திருமுர்த்தி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, விட வேண்டும் என அணை நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: