கூடலூர் அரசு பள்ளியில் பாஷா சங்கம் தொடக்க விழா

பாடாலூர், டிச.7: ஆலத்தூர் தாலுகா கூடலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாஷா சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பாஷா  சங்கம் என்ற பெயரில் அனைத்து இந்திய மொழிகளையும் வாய்மொழியாக பேசுவதற்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த திட்டமானது பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூடலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில்  தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர்  செந்தமிழ்செல்வி  தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை சுந்தராம்பாள் முன்னிலை வகித்தார். ஆலத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கினார். மாணவர்கள் மலையாளம் பேச  கற்றுக்கொண்டனர்.

Related Stories: