திருப்பூர், டிச.7: திருப்பூர் மாவட்ட ஆதி தமிழர் ஜனநாயக பேரவை சார்பில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் அழகுசுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் பவுத்தன் சிலைக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினார். தாராபுரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் 62வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் தமிழ்முத்து தலைமையில் அண்ணாசிலை அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
காங்கயம்:டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, காங்கயம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள நால்ரோடு பகுதியில் அவரது உருவப் படத்துக்கு நேற்று வீர வணக்கம் செலுத்தப்பட்டது. புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அமைப்பின் காங்கயம் வடக்கு பொறுப்பாளர் விடியல், அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.