ெஜயங்கொண்டத்தில் ஜேஆர்சி உறுப்பினர் தேர்வு கருத்தரங்கம்

ஜெயங்கொண்டம், டிச.7: உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் ஜூனியர் ரெட்கிராஸ் உறுப்பினர்களுக்கான எழுத்துத் தேர்வு, வாய்மொழித்தேர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.  கருத்தரங்கத்தில் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அண்ணாதுரை தலைமை வகித்தார். தா.பழூர் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி மற்றும் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் ஜூனியர் ரெட் கிராஸின் செயல் திட்டங்கள், செயல்பாடுகள், தல வரலாறு, அமைப்பு பற்றி பேசி அனைவருக்கும் நாட்காட்டிகளை வழங்கினார். கூட்டத்தில் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த 165 கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

 நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் சிறந்த ஜூனியர்களுக்கான எழுத்துத்தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு நடைபெற்றது. இதில் கல்வி மாவட்டத்தில் உள்ள 100 பள்ளிகளை சேர்ந்த 100 ஜூனியர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். மாவட்ட அளவில் 15 ஜூனியர்கள் சிறந்த ஜெனரலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரகுபதி, சேதுராமன், ஆனந்தன், குமரவேல் செய்திருந்தனர். முன்னதாக மாவட்ட கன்வீனர் சாமிநாதன் வரவேற்றார். ஆண்டிமடம் மண்டல பொருளாளர் ராஜா நன்றி கூறினார்.

Related Stories: