ஊட்டி, டிச. 7: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் மற்றும் நகரின் பல பகுதிகளில், நகராட்சி சார்பில் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த கடைகளை ஏலம் எடுத்து நடத்தி வருபர்களில்,ஒரு சிலர் மட்டுமே நகராட்சி நிர்வாகம் நிர்ணயித்துள்ள கடைகளில் வியாபாரம் செய்கின்றனர். 90 சதவீதம் பேர் கடைகளின் முன் பகுதி மற்றும் பக்கவாட்டில் கடைகளை நீட்டிப்பு செய்துவைத்துள்ளனர். சிலர், நடைபாதைககளை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அதே சமயம், சிலர் கடைகளின் அளவை அதிகரித்த போதிலும், இதற்கான வாடகை தொகையை நகராட்சிக்கு அவர்கள் ெசலுத்துவதில்லை. மாறாக, அவ்வப்போது சோதனைக்கு வரும் அதிகாரிகளை வியாபாரிகள் சரி கட்டிவிடுகின்றனர். சிலர், ஒன்று முதல் நான்கு கடைகள் வரை வாடகைக்கு எடுத்து, அதனை ஒரே கடையாக மாற்றியுள்ளனர். தனியார் கட்டிடங்களுக்கு இணையாக முன் பகுதியையும், பக்கவாட்டிலும் கூடுதலாக கட்டுமான பணி மேற்கொண்டு பிரமாண்டமாக மாற்றியுள்ளனர்.