கோவையில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்து அமைப்பினர் 219 பேர் கைது

கோவை, டிச.7:அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கோரி ரயில் மறியலுக்கு முயன்ற இந்து பாரத் சேனா மற்றும் பாரத் சேனா ஆகிய அமைப்பை சேர்ந்த 219 பேர் கைது செய்யப்பட்டனர்.அயோத்தியில் ராமர் கட்டக்கோரி இந்து பாரத் சேனா அமைப்பை சேர்ந்த நிறுவன தலைவர் வீரராஜன் தலைமையில் 16 பெண்கள் உட்பட 127 பேர் நேற்று மாலை கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, ரயில் மறியலுக்கு முயன்றனர். அவர்களை நுழைவாயில் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அதை தொடர்ந்து பாரத் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் செந்தில்கண்ணன் தலைமையில் 92 பேர் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கோரி நேற்று மாலை கோவையில் ரயில் மறியலுக்கு முயன்றனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். நேற்று மாலை ஒரே நாளில் இரு அமைப்பை சேர்ந்த 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: