சூலூர்.டிச.7: சூலூர் -காங்கேயம் பாளையம் முதல் சிந்தாமணிப்புதூர் பைபாஸ் சந்திப்பு வரையிலான 7.5 கி.மீ தொலைவிலான சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த அதே பகுதியில் மீண்டும் ரோடு அமைக்க அரசு உத்தரவிட்டு பணிகள் துவங்கியது. ஆண்டுக்கு 100 பேர் விபத்தில் உயிரிழக்கும் நிலையில் விரிவாக்கம் செய்யாமல் சாலை போடக்கூடாது என பொது நல அமைப்புகள் போராடியதால் அந்த பணி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் சாலை போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.இந்த முறை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் குறைந்த அளவில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் விரிவாக்கத்திற்கு இடைஞ்சலாக உள்ள மின்கம்பங்களை அகற்றாமல் மின்வாரியம் முரண்டு பிடித்து வருகின்றது.